Social Icons

செவ்வாய், 16 மே, 2017

மீண்டும் 19ஆம் திகதி முதல் இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை!

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் அமுல்படுத்தப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பின் போதே, ஐரோப்பிய ஒன்றிய பிரநிதிநிதிகள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

பாரிய அளவில் வரிச்சலுகைக் கிடைப்பதால், இலங்கையின் உற்பத்திகள் ஐரோப்பிய நாடுகளில் மலிவான விலைகளில் கிடைக்கும்.

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மூலமாக இலங்கையின் 1,400 உற்பத்திகள் 17 நாடுகளில் சந்தைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதில் அதிக கவனம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 
Blogger Templates