Social Icons

Featured Posts

ஞாயிறு, 18 மார்ச், 2018

ஆயுள் தண்டனை கைதி மனைவியின் இறுதி நிகழ்விற்கு அனுமதி

கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரனின் மனைவி ஆனந்தசுதாகர் யோகராணி கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக மரணமடைந்திருந்தார்.
இவரின் இறுதி நிகழ்வு இன்று (18) கிளிநொச்சி மருதநகர் கிராமத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வு பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் ஆனந்தசுதாகர் அழைத்து வரப்பட்டு மூன்று மணித்தியாலயங்கள் மனைவியின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்த பின்னர் மீண்டும் பொலிஸாரால் சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றிச் 
செல்லப்பட்டுள்ளார்.
தந்தை சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய போது அவரது மகளும் தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய சம்பவம் இடம்பெற்றமை அனைவரினதும் மனதையும் நெகிழ வைத்துள்ளது.
தந்தை 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பின்னர் தாயின் அரவணைப்பில் வாழ்ந்த இரண்டு பிள்ளைகளும் தற்போது தந்தையை பிரிந்தும்
 தாயை இழந்து உள்ளனர். 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 18 ஜனவரி, 2018

பத்தாயிரம் ரூபா நிதி உதவி முன்னாள் போராளிகளுக்கு

மறுவாழ்வு வழங்கப்பட்ட முன்னாள் போராளிகளில் தனியார் துறையில் பணியாற்றிவருவோருக்கு 10 ஆயிரம் ரூபா உதவித் தொகை வழங்கப்படவுள்ளது. அதற்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறு யாழ். மாவட்ட புனர்வாழ்வுக் கிளைக்குப் பொறுப்பான அதிகாரி 
அறிவித்துள்ளார்.

"மறுவாழ்வு வழங்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு 10 ஆயிரம் ரூபா உதவித்தொகை வழங்க வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டது. 
அந்த உதவித்தொகையை யாழ்.மாவட்டத்தில் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 
பதிவு செய்யப்பட்ட தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் முன்னாள் போராளிகள் இந்த உதவித் தொகைப் பெற முடியும். பணியாற்றும் நிறுவத்தால் அவர்களுக்கு ஊழியர் சேமலாப நிதித் தொகை செலுத்தப்பட்டிருக்கவேண்டும்.
இந்த விடயங்கள் பின்பற்றப்படும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் மறுவாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் தமது விவரங்களை யாழ்.மாவட்ட செயலகத்திலுள்ள புனர்வாழ்வுக் கிளையில் பதிவு செய்யவேண்டும்.
தகுதியானவர்களுக்கான 10 ஆயிரம் ரூபா உதவித் தொகை அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்" என்று புனர்வாழ்வுக் கிளையின் அதிகாரி மேலும் 
தெரிவித்தார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

திங்கள், 21 ஆகஸ்ட், 2017

யாழ். மாவட்ட வாகன இலக்கத் தகடு விவரங்கள் இணையத்தில்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரை காலமும் பொது மக்கள் தாங்கள் விண்ணப்பித்த வாகன இலக்கத் தகடுகள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துக்குக் கிடைக்கப் பெற்றமை தொடர்பான
 விவரங்களை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திலேயே பார்வையிட்டு வந்தனர்.
அதை இலகுவாக்கும் முறையில் இணைய சேவை ஊடாகத் தற்போது யாழ்.மாவட்ட செயலக உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அந்த விவரங்களை பொது மக்கள் பார்வையிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தச் சேவையை www.jaffna.dist.gov.lk எனும் மாவட்ட செயலக உத்தியோகபூர்வ இணையத் தளத்துக்குள் நுழைந்து வலது பக்க மூலையில் vehicle number plates என்ற தெரிவின் ஊடாகப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த நடைமுறையின் மூலம் வீட்டில் இருந்தவாறே தமது வாகன இலக்கத் தகடுகள் கிடைத்துள்ளனவா என்பதை அறிந்து கொண்டு திருப்திகரமான அரச சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவித்தன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

தேர்தல் வேட்பாளராக அவுஸ்திரேலியவில் யாழ் இளைஞர்

அவுஸ்திரேலியாவில், பசுமைக்கட்சியின் வேட்பாளராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞரொருவர் களமிறங்கவுள்ளார்.
யாழ். சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 31 வயதான சுஜன் செல்வன் எனும் குறித்த இளைஞன் 2000ஆம் ஆண்டு அகதியாக 
அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.
இறுதி யுத்த காலப்பகுதியான 2009இல் விடுதலைப்போராட்டம் தொடர்பாக அவுஸ்திரேலிய மக்களுக்கு கல்வி சார் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை அடிப்படையாக கொண்டு “வாய்ஸ் ஒப் தமிழ்” என்னும் 
அமைப்பினை நிறுவியுள்ளார்.
அத்துடன் அவுஸ்திரேலியாவில் மனித உரிமை ஆர்வலராகவும், அவுஸ்திரேலியாவிற்கு தஞ்சம் கோரி செல்பவர்களின் நலன் சார் நடவடிக்கைகளில் பங்கு கொள்ளும் ஒரு முன்னணி செயற்பாட்டாளராகவும் செயற்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையிலேயே அவர் பசுமைக்கட்சியின் வேட்பாளராக சிட்னி தெற்கு பிராந்தியத்தில் தமிழர்கள் அதிகம் வாழும் பிரோஸ்பெக்ட் (Prospect) தொகுதியில் தாம் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
மூன்று வருடத்துக்கு ஒரு முறை நடைபெறும் இத்தேர்தலில் prospect தேர்தல் தொகுதியில் தமிழன் வேட்பாளராக
 போட்டியிடவுள்ளார்.



திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 27 பேர் கைது!!!

யாழில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 27 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்து தொழில்களில் ஈடுபட்டிருந்த இந்தியர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள அதிகாரிகள் இவ்வாறு குறித்த இந்தியர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்பய்பட்டவர்களில் ஒருவர் விஞ்ஞான பட்டம் பெற்றுக் கொண்ட பட்டதாரி என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்டவர்களில் 19 பேர் யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களில் ஜோதிடம் பார்ப்பதனை தொழிலாக் கொண்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

அச்சுவேலிப் பொலிஸ் பொறுப்பதிகாரி சாரதிகளுக்கு சட்ட நடவடிக்கை!

போக்குவரத்து விதிமுறைகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக விதிக்கப்படும் தண்டப்பணம் 25 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இனிவரும் காலங்களில், விதிமுறைகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக இறுக்கமான சட்ட நடவடிக்கை பின்பற்றப்படும்” என, அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் திவுல்வல தெரிவித்தார்.  
போக்குவரத்து சட்ட விதிமுறைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் செயற்பாடு, இன்று (16) வல்லை சந்தியில் இடம்பெற்றது.  இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  
இதன்போது, வீதியில் பயணம் செய்த வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, சாரதிகளுக்கு விழிப்புணர்வு செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டது.   
தற்போது மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால், வல்லை பாலத்தின் ஊடாகச் செல்லும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இதர வாகனங்கள் வேகத்தைக் கட்டுப்படுத்திச் செல்லுமாறு பணிக்கப்பட்டனர்.   
மேலும், பாலத்தில் வழுக்கும் தன்மை காணப்படுவதால், மோட்டார் சைக்கிளில் பயணிப்போர், மணித்தியாலத்துக்கு 20 கிலோமீற்றர் வேகத்தில் செல்ல வேண்டும் எனவும் இதன்போது அறிவுறுத்தப்பட்டது.  அதேபோல், அரசாங்கத்தால் தற்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறும் சாரதிளுக்கு எதிராக விதிக்கப்படும் தண்டப்பணம் 
அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால், சாரதிகள் தேவைற்ற நிலையில் மதுபானம் பயன்படுத்துதல், அதிக வேகம் மற்றும் சாரதி அனுமதிப் பத்திரங்கள் இன்றி பயணிப்பதைத் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.   
இங்கு தொடர்ந்து கருத்துரைத்த அச்சுவேலிப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறியதாவது,  
“அச்சுவேலி பொலிஸ் பிரிவில், 24 மணிநேரமும் போக்குவரத்துப் பொலிஸார், வீதிச்சுற்று காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அச்சுவேலி பொலிஸ் பிரதேசங்களுக்கு உள்ளாக நுழையும் வாகன சாரதிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் தயவு தாட்சன்யம் இன்றி நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள்.   
“இதனால், அதிகளவு பணத்தைத் செலவு செய்யும் நிலை சாரதிகளான உங்களுக்கு ஏற்படும். இதனைக் கருத்திற்கொண்டு வீதிச் சட்டங்களைப் பின்பற்றி, போக்குவரத்தை மேற்கொள்ளவும்”
 எனத் தெரிவித்தார்.   
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


நாட்டில் புதிய கடற்படை தளபதியாக தமிழர் நியமனம்!

இலங்கையில் இடம்பெற்ற மூன்று தசாப்த கால யுத்தத்திற்குப் பின்னர் முதன்முறையாக இலங்கையின் முப்படைகளில் ஒன்றான கடற்படைக்கு தமிழர் ஒருவரை தளபதியாக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் 
தெரிவிக்கின்றன.
இலங்கை கடற்படையின் கிழக்கு பிராந்திய கட்டளைத் தளபதியாக கடமையாற்றி வரும் ரியர் அட்மிரல் ட்ரெவிஸ் ஜெரமி லியான்ந்துரு சின்னையாவை நியமிக்க இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் பெயரைக் குறிப்பிட விரும்பாத உயர் மட்ட அதிகாரியொருவர்
 தெரிவித்தார்.
இலங்கை மத்திய பிரதேசமான கண்டியை சொந்த இடமாகக் கொண்ட ரியர் அட்மிரல் ட்ரெவிஸ் ஜெரமி லியான்ந்துரு சின்னையா கண்டி ரினிட்டி கல்லூரியில் ஆரம்பக் கல்வியை கற்றுள்ளார்.
இதனையடுத்து கடற்படையின் திருகோணமலை கல்லூரியில் கெடட் அதிகாரியாக 1982 ஆம் ஆண்டு இணைந்து கொண்டு 1984 ஆம் ஆண்டு தனது கடற்படை அதிகாரி பட்டப்படிப்பை
 முடித்துக் கொண்டுள்ளார்.
பிரித்தானியாவின் டார்ட்மவுத் ரோயல் கடற்படைக் கலாசாலைக்கு தெரிவான அவர் கடற்படை அதிகாரிக்கான விசேட பயிற்சிகளையும் பட்டப்படிப்பையும் முடித்துள்ளார்.
இதன்போது பிரித்தானிய கடற்படையின் போர்க் கப்பல்கள் பலவற்றிலும் களநிலைப் பயிற்சிகளை முடித்துள்ளார். இதற்கமைய பிரித்தானிய போர்க் கப்பலான டெனரில் நில காலம் கடமையாற்றியும்
 உள்ளார்.
அதேவேளை கப்பல்களுக்கிடையிலான தகவல் பரிமாற்றம் மற்றும் அதிநவீன இலத்திரனியல் யுத்தம் குறித்தும் சிறப்புப் பயிற்சிகளை பிரித்தானிய கடற்படையிடம் பெற்றுக் கொண்டுள்ள ட்ரெவஸ் சின்னையா இறுதிக்கட்ட போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கடற்படை நடத்திய பெரும்பாலான தாக்குதல்களிலும் 
முக்கிய பங்கு வகித்துள்ளார்.
அதேவேளை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினால் ஓரம் கட்டப்பட்டிருந்த சின்னையாவிற்கு, இலங்கை யின் தற்போதைய மைத்திரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறியதும் முக்கிய பதவி வழங்கப்பட்டது.
இதற்கமைய கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஷீர் அஹமட்டிற்கும் – கிழக்கு மாகாண கடற்படைத் தளபதிக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலை அடுத்து கிழக்கு மாகாண கடற்படைத் தளபதியாக 2016 ஆம் ஆண்டு மே மாதம் ரியர் அட்மிரல் ரெவிஸ் சின்னையா 
நியமிக்கப்பட்டிருந்தார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




 
Blogger Templates