Social Icons

செவ்வாய், 7 மார்ச், 2017

வேலையற்ற மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் மீது வழக்கு தாக்கல்!

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு பேரணியின் போது மாவட்டச் செயலக அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தார்கள் எனவும் நிலைமையைக் குழப்பும் வகையில் நடந்துகொண்டார்கள் எனவும் பட்டதாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து பட்டதாரிகள் மீது வழக்கு தொடர்ந்துள்ள பொலிஸார், வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர் ரீ.கிஷாந்த் உட்பட ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர்கள் 4 பேரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராகுமாறு நீதிமன்றத்தால் அழைப்பாணை அனுப்பட்டுள்ளது.
குறித்த அழைப்பாணை கடந்த திங்கட்கிழமையன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பெப்ரவரி 28ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு மாவட்டச் செயலகம் வரை சென்று கவனயீர்ப்பு பேரணி நடத்தினர்.
இவ்வேளையிலேயே, மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக கடமையில் நின்ற பொலிஸார் மற்றும் கடமையிலிருந்த மாவட்டச் செயலக அதிகாரிகள் அவர்களின் கடமையைச் செய்யவிடாது பட்டதாரிகள் கவனயீர்ப்புப் பேரணி நடத்தியர்கள். இடையூறு விளைவித்தார்கள்
 எனவும் சுமுகமான நிலைமையைக் குழப்பும் வகையில் இவர்கள் நடந்து கொண்டார்கள் எனவும் கூறி மேற்படி 4 பேருக்கும் எதிராக நீதிமன்றத்தில் மட்டக்களப்பு பொலிஸாரால் வழக்குத் தாக்கல் 
செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை தங்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் வரை போராடுவதாக மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் தொடங்கிய சத்தியாக்கிரகப் போராட்டம் 15ஆவது நாளாகத்
 தொடர்கிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

லண்டனிலிருந்து விடுதலைப் புலிகளின் சீருடையுடன் வந்த தமிழ் மகன்.!

 ஜெனிவாவில் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கும், இன அழிப்புக்கும் நீதி கோரி ஜெனிவாவில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
இன்றைய தினம் சீரற்ற காலநிலை நிலவிய போதிலும், அதிகளவான புலம்பெயர் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் லண்டனில் இருந்து விடுதலைப் புலிகளின் சீருடையுடன் வந்த புலம்பெயர் தமிழ் மகன் ஒருவர் அனைவரின் கவனத்தையும்
 பெற்றிருந்தார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு சிவில் பாதுகாப்பு உத்தியோம்!

புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பொலிஸ் சமூகநலப் பிரிவுடன் இணைத்துக்கொள்வதற்கு சிவில் பாதுகாப்புத் திணைக்களம் நடவடிக்கை 
மேற்கொண்டுள்ளது.

இதில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களாக கடமையாற்றும் 200 முன்னாள் போராளிகளுக்கே இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தகவலை சிவில் பாதுகாப்புத் திணைக்கள ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் மொழிக் கையாள்கையில் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
குறித்த பிரதேசங்களில் புனர்வாழ்வு பெற்ற சுமார் 3,500 இற்கும் அதிகமான முன்னாள் போராளிகள் சிவில் பாதுகாப்பு சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் 
சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு சிவில் பாதுகாப்பு சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள 3,500 பேரில் 200 பேர் பொலிஸ் சமூகநலப் பிரிவுடன் இணையவுள்ளனர்.
இவர்களுக்கு பொலிஸ் துறை, சட்டம் மற்றும் ஒழுங்கு உள்ளிட்ட விடயங்களை தெளிவுபடுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.
மேலும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மொழிக் கையாள்கையில் நிலவும் பிரச்சினைகளுக்கும் இதன் ஊடாக தீர்வினை எட்டமுடியும் என்றும் அவர்நம்பிக்கை 
வெளியிட்டுள்ளார்.
பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளான சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தொடர்பில் பொலிஸாருடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றிலும் கைச்சாத்திடவுள்ளதாக சந்திரரத்ன பல்லேகம
 குறிப்பிட்டார்.
பொலிஸ் சேவையில் ஏற்கனவே சுமார் 1950 புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளான சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் 
சுட்டிக்காட்டியுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 6 மார்ச், 2017

குவைத்தில் சம்பளமின்றி பணி புரிந்த இலங்கைப் பணிப்பெண்ணுக்கு கிடைத்த அதிஸ்டம்!

 சம்பளமின்றி பணிபுரிந்த இலங்கைப் பெண்ணுக்கு சம்பளம் வழங்குவதாக குறித்த பெண்ணின் முதலாளி இணக்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பணிப்பெண்ணுக்கு 3300 தினார் பணம் செலுத்துவதாக உறுதியளித்துள்ளார்.
குறித்த இலங்கைப் பெண் சம்பளம் இன்றியே குவைத்தில் பணி புரிந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் முறைப்பாடு ஒன்றை பதிவு
 செய்துள்ளார்.
பணத்தை சேமித்து வைத்து தருவதாக கூறிய முதலாளி, நான்கு வருடங்களாக இலங்கைப் பெண்ணுக்கு சம்பளம் வழங்க மறுத்துள்ளார். சம்பளம் வழங்க மறுத்தமையால் குறித்த பணிப்பெண் அந்நாட்டில் செயற்படும் இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்தார் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த முறைப்பாடை தொடர்ந்தே குறித்த முதலாளி இலங்கைப் பணிப்பெண்ணுக்கு 3300 தினார் பணம் செலுத்துவதாக குவைத் நாட்டு பெண் உறுதியளித்துள்ளார்.
இலங்கைப் பணிப்பெண் தாய் நாட்டுக்கு செல்ல வேண்டும் என தெரிவித்த போதே அவரது சம்பளம் மறுக்கப்பட்டது என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஆண்களுக்கு நிகராக பெண்களும் மது விருந்து நிகழ்வில்?

பல அரச திணைக்களங்களில் கிழக்கு மாகாணத்தின்  மதுவுடன் கூடிய விருந்து நிகழ்வு ஒன்று நடைபெற்ற சந்தர்ப்பத்தில், குறித்த விருந்துபசார நிகழ்வில் அரச அதிகாரிகள் ஆண்களுக்கு நிகராக பெண்களும் மது போத்தலுக்கு முன்பாக அமர்ந்து இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளனவாம் .
குறித்த புகைப்படம் கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச திணைக்களங்களில் பணி புரியும் அரச அதிகாரிகள் என தெரியவருகின்ற நிலையில், கிழக்கு மாகாணத்தின் இன்றைய நிலை பற்றிய சிந்தனை அனைவர் மத்தியிலும் அதிகம் பேசப்படுகின்றது.
மக்களை மது பாவனையில் இருந்து மீட்டெடுத்து நல் வழிப்படுத்த வேண்டிய அரச ஊழியர்கள் இவ்வாறு மதுப்பாவனையில் ஈடுபடுவது மக்கள் மத்தியில் வேதனையளிக்கும் செயலாக இருப்பதாக 
கூறப்படுகின்றது! 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஞாயிறு, 5 மார்ச், 2017

இலங்கையை தண்டிக்க ஐநாவில் இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும் அன்புமணி இராமதாஸ் ?

ஜெனிவா நகரில் நடைபெற்று வரும் ஐநா மனித உரிமைப் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில், இலங்கை இறுதிப்போரின் போது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களுக்கு நீதி வழங்குவதற்காக அந்நாட்டு அரசின் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் தாக்கல் செய்துள்ளார். இதனடிப்படையில் இலங்கை மீதான விவாதம் மார்ச் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
போர்க்குற்றங்களுக்கு நீதி வழங்குவதற்கான இலங்கையின் செயல்பாடுகள் மனநிறைவு தரவில்லை  என்றும் ஆணையர் அவரது அறிக்கையில் கூறியுள்ளார். ‘‘இலங்கையின் ஒப்புதலுடன் 2015-ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை இலங்கை அரசு நிறைவேற்றவில்லை, கவலைக்கொள்ளும் அளவுக்கு மிகவும் காலதாமதம் செய்யப்பட்டுள்ளது. ஐநா தீர்மானத்தை நிறைவேற்றுவதில் இலங்கை அதிபர், பிரதமர், அமைச்சர்கள் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசுவது கண்டிக்கத்தக்கது. இனியும் தாமதிக்காமல் தீர்மானத்தை செயல்படுத்த  திட்டம் வகுக்கப்பட வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இலங்கையில் அமைப்பு ரீதியில் நடத்தப்பட்ட பன்னாட்டு குற்றங்களை விசாரிக்க சர்வதேச நீதிபதிகளைக் கொண்டு கலப்பு நீதிமன்றம் அமைப்பது கட்டாயமான தேவை. இத்தகைய குற்றங்களை விசாரிக்கும் வகையில் உள்நாட்டு சட்டங்களை உடனடியாக மாற்ற வேண்டும். மக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட நிலங்களை உடனடியாக
 திருப்பி அளிக்க வேண்டும், குடிமக்கள் விவகாரங்களில் இருந்து இராணுவம் முழுவதுமாக விலக்கப்பட வேண்டும். இலங்கை அரசின் நடவடிக்கைகளை முழுமையாக செயலாக்க ஐநா மனித உரிமைகள் ஆணையரின் நேரடி அலுவலகத்தை இலங்கையில் நிறுவ வேண்டும். போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலையை விசாரிப்பதற்கான ரோம்
 உடன்படிக்கையில் இலங்கை உடனடியாக கையொப்பம் இடவேண்டும். இலங்கை அரசின் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் ஐநா மனித உரிமை ஆணையர் பரிந்துரைத்துள்ளார்.
2015 ஆம் ஆண்டின் பேரவை தீர்மானத்தில் நிலைமாற்ற நீதி பொறிமுறை என்பதை இலங்கை அரசு ஏற்றது. இதில் உண்மையை வெளிக்கொணர்தல், குற்றவாளிகளைத் தண்டித்தல், இழப்புகளுக்கு பரிகாரம் தேடுதல், குற்றம் நடந்ததற்கான காரணங்களைக் கண்டுபிடித்து 
அமைப்புகளை மாற்றுதல் என நான்கு அங்கங்கள் உள்ளன. ஆனால், உண்மை, பரிகாரம் என இரு வழிமுறைகளை மட்டுமே இலங்கை அரசு ஓரளவுக்கு ஏற்பது போன்று தெரிவதாகவும், குற்றவாளிகளைத் தண்டிக்காமல் தவிர்க்க முயல்வதாகவும் ஆணையர் குற்றஞ்சாற்றியிருக்கிறார். இலங்கை அரசே அமைத்த ஆலோசனைக் குழுவின் அறிக்கையை ஏற்று செயல்படுத்த வேண்டும் என்றும் இந்த அறிக்கை 
வலியுறுத்தியுள்ளது.
ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்காமல் ஏமாற்ற இலங்கை அரசு நடத்தும் நாடகம் மனித உரிமை ஆணையர் அறிக்கை மூலம் தெளிவாகியுள்ளது. இதற்கு மேலும் இலங்கை அரசின் ஏமாற்று சதிகளுக்கு சர்வதேச சமூகம் பலியாகக் கூடாது. 2015-ஆம் ஆண்டு மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் வாக்குறுதிகளை
 முழுமையாக நிறைவேற்றாமல், 
ஒருசிலவற்றை மட்டும் நிறைவேற்ற ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. மாறாக, மனித உரிமை பேரவையின் நடவடிக்கைகளை தீவிரமாக்குவதுடன், ஐநா பொது அவைக்கும், பாதுகாப்பு மன்றத்துக்கும் இலங்கை விவகாரத்தை கொண்டு செல்ல வேண்டும்.
குறிப்பாக, இலங்கையை காப்பாற்றும் முயற்சிகளில் இந்தியா இனியும் ஈடுபடக்கூடாது. மாறாக,  நீதியின் பக்கம் நிற்க முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி, ஐ.நா. மனித உரிமை 
பேரவையில் 2015-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட  தீர்மானத்தின் அம்சங்களை நிறைவேற்றாமல் காலந்தாழ்த்தும் இலங்கை அரசைக் கண்டிக்கும் வகையிலான தீர்மானத்தை 
இந்திய அரசே கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். ஐநா மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள - பன்னாட்டு நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றம் அமைப்பது உள்ளிட்ட - அனைத்து பரிந்துரைகளையும், உரிய காலக்கெடுவுக்குள் நிறைவேற்றுவதற்கான செயல்திட்டத்தையும் இந்திய அரசு அதன் தீர்மானத்தில் முன்வைக்க வேண்டும்.
கடந்த காலங்களில் ஐ.நா. மனித உரிமை ஆணையம் போன்ற பன்னாட்டு அமைப்புகளில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்றவில்லை. இத்தகைய சூழலில், மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அம்சங்களை இலங்கை அரசு செயல்படுத்துவதை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம் தொடர்ச்சியாக கண்காணிப்பதையும், குறிப்பிட்ட கால இடைவெளியில் மனித உரிமைப் பேரவையில் விவாதிப்பதையும் உறுதி செய்யும்படி இந்தியத் தீர்மானம் வலியுறுத்த வேண்டும்.
இவற்றுக்கெல்லாம் மேலாக, இலங்கை இறுதிப்போரில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட  போர்குற்றங்களுக்கு நீதி பெற்றுத் தரும் நோக்குடன், இலங்கை சிக்கலை ஐநா பொது அவையின் மூலம் ஐநா பாதுகாப்பு மன்றத்துக்கு கொண்டு செல்லும்படியும் ஐநா மனித உரிமை பேரவையை இந்தியா கோர வேண்டும். 
ஈழத் தமிழர்கள் இந்தியாவை தந்தை நாடாக கருதுவதாலும், ஈழத்தமிழரை தொப்புள் கொடி உறவாக இந்தியத் தமிழர்கள் கருதுவதாலும் அவர்களுக்கு நீதிபெற்றுத் தருவதற்கான தார்மீக 
கடமையும், பொறுப்பும் இந்தியாவுக்கு உண்டு. ஜெனிவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில்  பொருத்தமான தீர்மானத்தைக் கொண்டு வந்து நட்பு நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றுவதன் மூலம் இந்தக் கடமையை இந்தியா நிறைவேற்ற வேண்டும் என்று 
வலியுறுத்துகிறேன்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





வெள்ளி, 3 மார்ச், 2017

ஈழத்தமிழர் நீதி: குழப்பமும் - தெளிவும் ;ஐ.நாவில்!

தற்போது ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 34வது கூட்டத்தொடர் நடந்துவரும் நிலையில், வரும் மார்ச் 22ல் இலங்கை மீதான விவாதம் அங்கு நடைபெறவுள்ளது.
இந்நிலையில், ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 2015 தீர்மானத்தின் அடுத்தக் கட்டம் குறித்த தமிழர்களின் பார்வை இப்போது ஓரளவுக்கு தெளிவாகி வருகிறது. இது வரவேற்க தக்கதாகும்.
இலங்கை மீதான குற்றச்சாட்டுகளை ஐ.நா பாதுகாப்பு அவைக்கு அனுப்ப வேண்டும் என்கிற கோரிக்கைக்கு மத்தியில், "ஐ.நா மனித உரிமைப் பேரவையின் தற்போதைய தீர்மானத்தின் காலத்தினை மேலும் நீட்டிக்க வேண்டும்" என்றும்
"அதனை தொடர்ந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவை கண்காணிக்க வேண்டும்" நாடுகடந்த தமிழீழ அரசு ஏற்படுத்திய வல்லுநர் குழு 28.02.2017-ல் பரிந்துரை செய்துள்ளது.
இதே கோரிக்கைதான் கடந்த 25.02.2017ல் சென்னையில் பசுமைத் தாயகம் நடத்திய ஐ.நா மனித உரிமைப் பேரவையும் ஈழத்தமிழர் நீதியும்: அடுத்தது என்ன? UNHRC 34வது கூட்டத்தொடர் குறித்த கலந்துரையாடல் - கூட்டத்திலும் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
குழப்பம் என்ன?
2015 ஐநா மனித உரிமைப் பேரவை தீர்மானத்தினை செயல்படுத்த இலங்கை அரசுக்கு மேலும் கால நீட்டிப்பு வழங்கக் கூடாது எனவும், இந்த விவகாரத்தை ஐ.நா பொதுச்சபைக்கு அனுப்ப வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை வைத்தனர். இது நியாயமான கருத்தே ஆகும்.
எனினும், ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இன்னொரு தீர்மானமே வரக்கூடாது என்பது போலவும், இந்த விடயத்தை ஒரேயடியாக ஐ.நா மனித உரிமைப் பேரவை கைக்கழுவ வேண்டும் என்பது போலவும் சிலர் பேசத்தொடங்கினர்.
(அதாவது, பொதுச்சபைக்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்ட பின்னர், மனித உரிமைப் பேரவையில் வேலை இல்லை என்பதான தவறான புரிதல் உருவானது).
இதன் அடுத்தக்கட்டமாக, "இலங்கை மீது ஒரு தீர்மானத்தை முன் வைக்கப்போவதாக இங்கிலாந்து அரசு கூறுவதே தவறு" என்றும், அத்தகைய தீர்மானத்தை அந்த நாடு பின் வாங்க வேண்டும் 
என்றும் பேசினர்.
கடைசியில், "இன்னொரு ஐ.நா தீர்மானத்தை ஆதரிப்பவர்கள் தமிழினத் துரோகிகள்" என்கிற அளவுக்கு தவறான பிரச்சாரம் சென்றது.
'உண்மை என்ன?"
2015ஆம் ஆண்டில் வெளியான ஐநா மனித உரிமைகள் ஆணையர் அலுவலக விசாரணைக் குழுவின் அறிக்கை (OISL) மீதான சர்வதேச நடவடிக்கைகளை - நியூயார்க்கில் உள்ள ஐநா பொதுச்சபைக்கும், ஐநா பாதுகாப்பு அவைக்கும் - விரிவாக்க வேண்டும் என்பது சரியான 
வியூகம்தான்.
அதற்காக, ஜெனீவாவில் உள்ள ஐநா மனித உரிமைப் பேரவையில் இருந்து இதனை கைவிட வேண்டும் என்பது மிகத் தவறான வாதம் ஆகும்.
இப்போதைக்கு, ஜெனீவாவில் மட்டுமே இலங்கை விவகாரம் உயிர்ப்புடன் உள்ளது. அதுமட்டுமல்லாமல், மனித உரிமைகள் மற்றும் நிலைமாற்ற நீதி (transitional justice) விவகாரங்களில் உலகின் உச்சமான 
அமைப்பு இதுதான்.
இந்த அவையில் இலங்கை தொடர்ச்சியாக விவாதிக்கப்படுவதும், கண்காணிக்கப்படுவதும் மிக மிக மிக அவசியம் ஆகும். இதற்கு வரும் மார்ச் 23 ஆம் நாளன்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டே ஆக வேண்டும்.
அப்படி ஒரு தீர்மானம் வராமல் போய்விட்டால், இனி இலங்கையை கேள்வி கேட்பதற்கு ஒரு பன்னாட்டு அரங்கம் இல்லாமலேயே 
பொய்விடும்.
எனவே, 'தீர்மானத்தில் என்ன இருக்கப்போகிறது' என்பதுதான் தமிழர்களின் கோரிக்கையாக இருக்க வேண்டுமே தவிர, 'புதிய தீர்மானமே தேவையில்லை' என்பது அல்ல.
மிகக் குறைந்த கோரிக்கையாக பார்த்தால் கூட, 2015 தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்யக் கூடாது என்பதும், பழைய தீர்மானம் உடனடியாகவும் முழுமையாகவும் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதும்தான் முக்கியமானதாகும்.
அதே நேரத்தில், இந்த விவகாரத்தை ஐ.நா பொதுச்சபைக்கு அனுப்ப வேண்டும் என்கிற தமிழர்களின் கோரிக்கைக்கு 47 உறுப்பு நாடுகளில் ஒரே ஒரு நாடு கூட இதுவரை ஆதரவு அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
"குழப்பம் தவிர்க்க வேண்டும்"
ஈழத்தமிழர் நீதிக்கான போராட்டத்தினை ஐ.நாவினை இலக்காக வைத்து நடத்தும் போது, பல தவறான கருத்துகள் உருவாக்கப்படுகின்றன.
குழப்பம் 1. போர்க்குற்றம் என்று
 சொல்லாதே!
போர்க்குற்றம், மானுடத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகிய மூன்றுமே கொடூரமான குற்றங்கள்தான் என்கிற நிலையில் 'போர்க்குற்றம்' என்று சொல்லாதே என்று சிலர் முழங்கினர்.
குழப்பம் 2. அமெரிக்க தீர்மானம் அயோக்கிய தீர்மானம்!
இலங்கையில் நடந்த குற்றங்கள் குறித்து ஐநா மனித உரிமை ஆணையர் அலுவலகம் விசாரணை நடத்த வேண்டும் என்கிற தீர்மானத்தை 2014-ல் அமெரிக்கா கொண்டு வந்தபோது - "அமெரிக்க தீர்மானம் அயோக்கிய தீர்மானம்" - என்கிற பிரச்சாரம் நடத்தப்பட்டது.
சென்னையில் அமெரிக்க நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஆனால், அந்த தீர்மானத்தால் கிடைத்த விசாரணை அறிக்கைதான் (OISL Report 2015 http://www.ohchr.org/EN/HRBodies/HRC/Pages/OISL.aspx) இப்போது பன்னாட்டு அரங்கில் ஏற்கபட்ட ஒரே ஆயுதமாக உள்ளது.
2015ல் தற்போதைய தீர்மானத்தினையும் சிலர் எதிர்த்தார்கள். அதனை தீயிட்டுக் கொளுத்தினார்கள். ஆனால், இன்னமும் அந்த ஒரே தீர்மானம்தான் இந்த சிக்கலை சர்வதேச அரங்கில் 
நிலைநிறுத்தியுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


 
Blogger Templates